Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
மஹியங்கனை, ரிதிமாலயத்த விகாரைக்கு முன்பாக கைவிடப்பட்ட நிலையிலுள்ள மண்டபமொன்றிலிருந்து, சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை, மஹியங்கனை பொலிஸார், இன்று மாலை மீட்டுள்ளனர்.
மேற்படி மண்டபத்திலிருந்து துர்நாற்றம் வருவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவரின் சாரம், காற்சட்டை மற்றும் கைபை என்பனவும் மீட்கப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக, மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago