Editorial / 2025 ஜனவரி 22 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்வீக் தோட்ட பிரவுன்ஸ்வீக் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக அதே தோட்டத்தை சேர்ந்த திருமணமான 32 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தாத்தா அம்மாயின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார். எனினும், அச்சிறுமி, குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்கு, முதியோருக்கு தெரியாமல் அவ்வப்போது சென்று வந்துள்ளார். இதனை அவதானித்த பாதுகாப்பில் இருந்த வேலையில் இடையே இடையே சிறுமி, சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். இது தொடர்பில், அயலவர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அந்த தோட்டத்துக்கு விரைந்து, குடும்பஸ்தரை கைது செய்த பொலிஸார், சிறுமியை டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சந்தேக நபர் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செ.தி.பெருமாள்
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago