2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

சிறுமியின் உடல் நல்லடக்கம்

கு. புஷ்பராஜ்   / 2017 ஜூன் 16 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

நுவரெலியா -  ஹட்டன் பிரதான வீதியின், நானுஓயா நகரின் பாதசாரிகள் கடவையில், பாதையைக் கடக்க முற்பட்டபோது, கனரக வாகனம் மோதி பலியான 6 வயது சிறுமியின் இறுதிக் கிரியைகள்,  ரதல்ல கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள பொது மயானத்தில், இன்று (16) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, நானுஓயா நகரமும், பிரதேசமும் பதற்றநிலையிலிருந்து ஒரு சுமூகமான நிலைக்கு திரும்பியுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் பூதவுடலுக்கு   பிரதேச மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை அப்பகுதியில் அனுதாப பதாதைகள் மற்றும் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .