Editorial / 2025 மார்ச் 24 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற மொரட்டுவையைச் சேர்ந்த 62 வயதான அனுரகுமார பெர்ணாந்து, ஊசி மலையில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
திடீரென சுகயீனமடைந்து அவரை, உறவினர்கள் நல்லத்தண்ணி நகருக்கு அழைத்து வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வரும் வேளையில் உயிர் இழந்துள்ளார்.
அவரது உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago