2025 ஜூன் 28, சனிக்கிழமை

சோகம பெண்ணின் மரணத்தில் சந்தேகம்

Editorial   / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புஸ்ஸல்லாவை சோகம தோட்டத்தில், கடந்த 24ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக, அப் பெண்ணின் சகோதரன், புஸ்ஸல்லாவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.   

மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணொருவர், அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.   
கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அப் பெண் சுருக்கிட்டுக் கொண்டதாக, விசாரணைகளிலிருந்து ஏற்கெனவே, தெரியவந்துள்ளது.  

மரண விசாரணை அறிக்கையிலும் அவ்வாறே தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.  இந்நிலையில், தன்னுடைய சகோதரியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவருடைய சகோதரன், புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .