R.Maheshwary / 2022 மார்ச் 09 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹப்புத்தளை- பண்டாரயெலிய தோட்டத் தொழிலாளர்களால் இன்று (9) பணிபகிஸ்கரப்பும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
பறிக்கப்படும் கொழுந்தை நிறுவை செய்ய, தோட்ட நிர்வாகம் புதிதாக டிஜிட்டல் தராசைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தராசு 4 கிலோகிராம் எடையை குறைத்து காட்டுவதாக தொழிலாளர்கள் தெரிவிப்பதுடன், தொழிலாளர்களின் அடையாள அட்டைப்பதிவும் இத்தராசில் பதியப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
சுமார் 500 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், “நவீன முறையிலான டிஜிட்டல் தராசு எமக்கு வேண்டாம்“. என்ற கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026