2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தரிசனத்திற்கு சென்றவர் மரணம்

Janu   / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிஸ்சாவலை தெஹியோவிற்ற பகுதியிலிருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த குடும்பமொன்று  ஞாயிற்றுக்கிழமை  (25) இரவு 10 மணியளவில் சிவனடி பாத மலைக்கு சென்று திரும்பி  வரும்போது  குறித்த  குடும்பத்தின்  குடும்பஸ்தரான 78 வயதுடைய டபிள்யூ.குணவர்தன என்பவர் கடும் சுகவீனம்  உற்ற நிலையில்  மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில்  அனுமதிக்க பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்கு  பின்னர்  சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக  என நல்லதண்ணி பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .

செ.தி.பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X