2025 ஜூன் 28, சனிக்கிழமை

தீ விபத்தால் மூன்று குடியிருப்புகள் முற்றாகச் சேதம்

Editorial   / 2017 டிசெம்பர் 24 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா லபுக்கலை தோட்டம், இலக்கம் 7 லயன் குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், ஒரு வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேசதமடைந்துள்ளனவென, நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குடியிருப்பொன்றின் உரிமையாளர், வீட்டிலுள்ள சுவாமி படத்துக்கு விளக்கேற்றிய போது, விளக்குத் தவறி திறைச் சேலை மீது விழுந்ததாகவும் திறைச்சேலையில் பரவியத் தீ, வீட்டின் கூரைமீது (அட்டல்) அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுகளில் பரவியதால் ஏனைய குடியிருப்புகளுக்கும் தீ பரவியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தத் தீ விபத்தில் ஒருவருக்கும் எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை என்றும், எனினும் ஒரு குடியிருப்பு முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் மேலும் இரு குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனவென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துத் தொடர்பில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .