Editorial / 2023 நவம்பர் 21 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாண அமைச்சுக்கு சொந்தமான தெல்தெனிய ஆரம்ப வைத்தியசாலையின் கர்ப்பிணிப் பிரிவுக்கு மேலே உள்ள மேட்டின் ஒரு பகுதி, விடுதி கட்டிடத்திற்குள் இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த ஆபத்தான நிலை காரணமாக கர்ப்பிணிப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், 20 கர்ப்பிணித் தாய்மார்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெல்தெனிய வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தால் வைத்தியசாலையின் மேல் பகுதியில் உள்ள மண்மேடு சரிந்து ஆபத்தை ஏற்படுத்தும் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்புக்கு மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ள வழி சிறப்பாக உள்ளதாக மருத்துவமனையைச் சுற்றியுள்ள மக்கள் தெரிவித்தனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில், எதிர்காலத்தில் கனமழை பெய்து மேலும் மண்மேடு சரிந்து விழும் முன், உடனடியாக அந்த இடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை குழு அதிகாரி தெரிவித்தார்.
23 minute ago
52 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
52 minute ago
1 hours ago
3 hours ago