Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 13 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஷ் கீர்த்திரத்ன
தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், உள்ளூராட்சிமன்றங்கள் இயங்காமல் இருப்பது கவலையளிப்பதாகத் தெரிவித்த அம்பகன்கோரள பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுனில் விஜேதிலக்க, இதனால், பிரதேச அபிவிருத்திகள் முடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு, நல்லாட்சி அரசாங்கத்துக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டதாகக் கூறிய அவர், தேர்தலுக்குப் பின்னரும் கூட, உள்ளூராட்சிமன்றங்களின் பணிகள் இழுபறி நிலையிலேயே உள்ளதாகக் கவலை வெளியிட்டார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக, அம்பன்கோரள பிரதேச சபையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகள், காலம் தாழ்த்தப்படாது, விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago