Editorial / 2023 மே 25 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர விலாசத்தை, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை (25) அறிவித்தார்.
சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கனிக்ஷிகா டி சில்வா மேற்கண்டவாறு மன்றுக்கு அறிவித்தார்.
தோட்டத்தொழிலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, மூர்து பெர்ணான்டோ மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் வியாழக்கிழமை (25) ஆராயப்பட்டது.
இந்த மனுவில், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
43 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
53 minute ago
58 minute ago