2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீரில் முழ்கி யுவதி பலி

Sudharshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் முழ்கி 27வயதான ரத்னவேல் ஞானேஸ்வரி என்ற யுவதி உயிரிழந்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா, அப்கட் பிரதான வீதியில் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மேற்படி யுவதி, இன்று காலை 8.30 மணியளவில் நீர்த்தேக்கத்துக்கு குளிக்க சென்றுள்ளார்.

மேற்படி யுவதி குளித்துக்கொண்டிருக்கும் போது தீடிரென நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.

இதனையடுத்து, பிரதேசவாசிகள் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியோடு சடலத்தை மீட்டுள்ளனர்.

 

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .