2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நெல் கொள்வனவின் குழப்பநிலை முடிவுக்கு வந்தது

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்து விராஜ் அபயசிறி

மாத்தளை மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) மற்றும் புதன்கிழமைகளில் (26) நெல் கொள்வனவு தொடர்பில் நிலவி வந்த குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸ் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்றுப் புதன்கிழமை(26) நடைபெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு  உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 45 ரூபாய், சம்பா நெல் ஒரு கிலோகிராம்  50 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வில்கமுவ, ஹெட்டிபொல ஆகிய பகுதிகளில் நெல் கொள்வனவு தொடர்பில், நெல் கொள்வனவு திணைக்களத்தின் லொறி சாரதியினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து முரண்பாடே இக்குழப்ப நிலைக்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .