Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பசறை, கோணகலை தோட்டத்தின் மேற்பிரிவில் நிலவிய மண்சரிவு அபாயம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 65 குடும்பங்களுக்கும் இதுவரை எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதுக்கு இணங்க, இலக்கம் 1,2 மற்றும் 3 லயன் தொகுதியில் வசித்த 65 குடும்பங்களைச் சேர்ந்த 210 பேர் வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டனர்.
எனினும், தமக்கு உணவு மற்றும் எந்தவொரு வசதிகளும் இதுவரை ஏற்படுத்தி கொடுக்கவில்லை அம்மக்கள் தெரித்தனர்.
இதுகுறித்து பசறை பிரதேச செயலாளர், கிராமசேவகர், தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்ததுடன் உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .