2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நோர்வூட் பிரதேச சபை தே.ம.ச வசமானது

Editorial   / 2025 ஜூன் 27 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கிருஷ்ணா

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பிரான்சிஸ் ஹெலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி, நோர்வூட் பிரதேச சபையின்  அதிகாரத்தை கைப்பற்றியது .

இதேவேளை, ஐக்கிய  மக்கள் சக்தியின் உறுப்பினர் நடராஜ்  சிவக்குமார் உப -தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

  நோர்வூட் பிரதேச சபை ஒன்று கூடல், வெள்ளிக்கிழமை (27)    இடம்பெற்ற கன்னி அமர்வில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது .

இதன் போது திறந்த   வாக்கெடுப்பின் மூலம் தவிசாளர் உப-தவிசாளர் தெரிவு செய்யப்பட்டனர் .

திறந்த வாக்கெடுப்பில் தவிசாளராக போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிரான்சிஸ் ஹெலன் , இ.தொ. க சார்பில் ரவி குழந்தைவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதன் அடிப்படையில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட பிரான்சிஸ் ஹெலன் 12 வாக்குகளையும் இ.தொ.க சார்பில் போட்டியிட்ட ரவி குழந்தை வேல் 7 வாக்குகளும் பெற்றனர் .

உப -தவிசாளர் தெரிவில் ஐக்கிய  தேசிய கட்சியில் போட்டியிட்ட குழந்தை ராஜேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிட்ட நடராஜ் சிவகுமார் ஆகியோர் போட்டிட்டியிட்டனர். இதில் சிவகுமார் 12 வாக்குகளைப் பெற்று உப -தவிசாளரானார் .

குழந்தை ராஜேந்திரன் ஆறு வாக்குகளை பெற்றிருந்த நிலையில் இ.தொ.க சார்பில் போட்டியிட்ட உறுப்பினரும் தபால் சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும் நடுநிலை வகுத்த நிலையில் சிவக்குமார் அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.

தேசிய மக்கள் சக்தி -06 உறுப்பினர்கள்

இ.தொ.கா- 06 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி- 05உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி- 01 உறுப்பினர்

ஜனநாயக மக்கள் முன்னணி - 01 உறுப்பினர் 

சுயேச்சைக்குழு- 01 உறுப்பினர் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .