2025 மே 15, வியாழக்கிழமை

நாளை விசேட போக்குவரத்து திட்டம்

Freelancer   / 2023 பெப்ரவரி 18 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நாளை (19) நடைபெறும்  குடியரசு பெரஹெரவை முன்னிட்டு கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த போக்குவரத்து திட்டம் நாளை மாலை 05 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை அமுல்படுத்தப்படும்..

ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடியரசு பெரஹெர, இலங்கையின் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டி மங்களகூடத்தில் இருந்து நாளை ஆரம்பிக்கும் பெரஹெர, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி வழியாக ரஜ வீதியில் பிரவேசித்து மீண்டும் தலதாமாளிகையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .