Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2025 ஜூன் 19 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி மாவட்டம் பன்விலை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. அதன் கன்னியமர்வு, வியாழக்கிழமை (19) நடைபெற்றது.
வாக்கெடுப்பின் போது, மேலதிக இரண்டு ஆசனங்களால் பன்விலை பிரதேச சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது.
மொத்தமாக 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சர்வஜன பலய (1 ஆசனம்) பொது ஜன ஐக்கிய முன்னணி (1 ஆசனம்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (1 ஆசனம் ) ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.
இதன்போது 9 ஆசனங்களோடு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றியது.
5 ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ( 2 ஆசனங்கள்) வாக்களித்தது.
சபையின் தலைவராக 9 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிஹில்ல கங்கானமகே அனுரஷாந்த தெரிவு செய்யப்பட்டார்.
எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பந்துல பண்டார ரத்னாயக 7 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
சபையின் உப -தலைவராக பொது பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மஞ்சுள தேசப்பிரிய வீரசிங்க 9 வாக்குகளைப் தெரிவு செய்யப்பட்டார்.இவரோடு போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த வி.எஸ்..அரியநாயகம் 7 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
27 Jun 2025