2025 ஜூன் 28, சனிக்கிழமை

பன்விலை பிரதேச சபை சஜித் வசமானது

Editorial   / 2025 ஜூன் 19 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்  

கண்டி மாவட்டம் பன்விலை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. அதன் கன்னியமர்வு, வியாழக்கிழமை (19) நடைபெற்றது.

வாக்கெடுப்பின் போது,  மேலதிக இரண்டு ஆசனங்களால் பன்விலை பிரதேச சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது.

மொத்தமாக 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சர்வஜன பலய (1 ஆசனம்) பொது ஜன ஐக்கிய முன்னணி (1 ஆசனம்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (1 ஆசனம் ) ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.

 இதன்போது 9 ஆசனங்களோடு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றியது.

 5 ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ( 2 ஆசனங்கள்) வாக்களித்தது.

சபையின் தலைவராக 9 வாக்குகளைப் பெற்ற    ஐக்கிய மக்கள் சக்தியின் பிஹில்ல கங்கானமகே அனுரஷாந்த தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பந்துல பண்டார ரத்னாயக 7 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

சபையின் உப -தலைவராக பொது பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மஞ்சுள தேசப்பிரிய வீரசிங்க 9 வாக்குகளைப்   தெரிவு செய்யப்பட்டார்.இவரோடு போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த வி.எஸ்..அரியநாயகம் 7 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .