Janu / 2024 ஜூலை 30 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல இ/நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட அதிகாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மாணவன் நிவித்திகல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அத்தோட்ட பொதுமக்கள் , இளைஞர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் நிவிதிகல பொலிஸ் நிலையத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்ததை அடுத்து தாக்குதல் நடத்திய மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
தாக்குதல் தொடர்பில் நிவித்திகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்துவதுடன் சந்தேக நபர்களை புதன்கிழமை (31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த குமார்

7 hours ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026