2025 ஜூன் 21, சனிக்கிழமை

பூஜாபிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவராக அனுர பிரனாந்து

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பூஜாபிட்டிய பிரதேச சபையின், புதிய தலைவராக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த, அனுர பிரனாந்து, இன்று 23ஆம் திகதி தெரிவானதுடன், அதன் புதிய உப தலைவராக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர், ஏ.எல்.எம்.ரஸான் தெரிவானார்.

பூஜாபிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவரையும், உப தலைவரையும் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, இன்று (23), பூஜாபிட்டிய பிரதேச சபையில், மத்திய மாகாண, உள்ளூராட்சி ஆணையாளர், மேனக ஹேரத் தலைமையில் இடம் பெற்றது.

முதலில் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான பெயர்களை மும்மொழியுமாரு, உள்ளூராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியின் உறுப்பினர், அனுர பிரனாந்துவின் பெயரை, சம்பத் தர்மபிரிய மும்மொழிந்ததுடன், இதனை லக்ஷ்மன் தொலபிஹில்ல, வழிமொழிந்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி சார்பில், சுரஞ்ஜித் குமார விக்கிரமசூரியவின் பெயரை ரம்சான் மொஹமட் மும்மொழிய, சுனில் கொடுகொடெல்ல அதனை வழிமொழிந்தார். அதேநேரம், தலைவர் பதவிக்கு இருவரின் பெயர்கள் மும்மொழியப்பட்டமையால், வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த அனுர பிரனாந்து 17 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த சுரஞ்சித் குமார விக்கிரமசூரிய 8 வாக்குகளையும் பெற்றதுடன், அனுர பிரநாந்து புதிய தலைவராகத் தெரிவானார்.

இதன்போது, உப தலைவர் பதவிக்கு, ஏற்கனவே மும்மொழியப் பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எல்.எம்.ரஸானின் பெயரை அஜித் சமரதுங்க வழிமொழிந்தார். உப தவைர் பதவிக்கு வேறு பெயர்கள் மும்மொழியப் படாததால், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏ.எல்.எம்.ரஸான் தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .