2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மரண வீட்டில் கைகலப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண வீட்டுக்கு வந்திருந்தவர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பினால் மரணவீடே ஒரு ரணகளமாக காட்சியளித்தது.

இந்த சம்பவம் தெஹியோவிட்ட அல்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரது வாகனங்கள் மீது, மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும்  இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மறைந்திருந்த  குழுவொன்று,  அரசியல்வாதிக்கு சொந்தமான அரச வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.  

இதேவேளை, தங்களின் பாதுகாப்பை கருதிற்கொண்டு மறைந்திருந்த அரசியல்வாதியின் உறவினர்கள் இருவரும் மற்றுமொருவரும் காணாமல் போயிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X