2025 மே 14, புதன்கிழமை

மற்றுமொரு பேருந்து விபத்து ; நால்வர் காயம்

Janu   / 2025 மே 14 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாக வலப்பனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்து, நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவு பகுதியில் செவ்வாய்க்கிழமை  (13) மாலை 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலிருந்து நுவரெலியாவுக்கு  சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து வீதியின் இடதுபுறமுள்ள  மலையில் மோதியுள்ளது.

இந்த விபத்து ஏற்பட்ட இடம்  செங்குத்தான மற்றும் வளைவுகள் நிறைந்த இடமாக காணப்படுவதால், கடந்த காலங்களில் அந்த இடத்தில் பல கடுமையான விபத்துக்கள் நடந்துள்ளதாக  உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .