Editorial / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையக சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் சிரார்த்த தினத்தையொட்டி கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
கவிதைக்கான தலைப்புக்கள்.
தடம் பதித்த தானைத் தலைவன்
இலக்கு நோக்கி இனிய பயணத்தில் ஆறுமுகன் தொண்டமான்
பாட்டாளி வடுதலையின் கூட்டாளி
தவைரது புகழைச் சொல்ல நாள் போதுமா
உழைப்போருக்கு தோழன், ஏய்த்து பிழைப்போருக்கு...
கட்டுரைக்கான தலைப்புக்கள்
ஆளுமையின் அடையாளம் அமரர் ஆறுமுகன் தொண்டமான்
இன்றைய மலையகத்தின் இனிய நினைவுகளில் அவர்
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பாதை
இளைய தலைமுறையின் இங்கிதமான வழிகாட்டி
சமூக எழுச்சிக்கு வித்திட்ட வீரமகன்
போட்டிகளின் விதிமுறைகள்
கவிதை 150 சொற்களுக்குள்ளும், கட்டுரை 800 சொற்களுக்குள்ளும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
படைப்புக்கள் A4 தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டும். பெயர், முகவரி தனியாக ஒரு தாளில் எழுதப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
அச்சு, இலத்திரணியல் ஊடகங்களில் ஏற்கெனவே வெளியானவை ஏற்றுக்கொள்ளப்பட மட்டாது.
படைப்புக்கள்; போட்டி ஏற்பாட்டாளர், இ.தொ.கா, இல 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் 15.03.2023க்கு முன்னர் அனுப்பிவைக்கப்படல் வேண்டும். மேலதிக தகல்களுக்கு 071-6876548 அல்லது 070-4329131 தொடர்பு கொள்ளவும்.
5 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Mar 2026