R.Maheshwary / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கெசல்கமுவஓயா வனப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், மண்மேடு சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று (12) பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை- டின்சின் நகரத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் மேலும் சிலருடன் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது, 3 மணியளவில் மாணிக்கக்கல் அகழ்ந்த குழிக்குள் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இந்த நிலையில், அவருடன் சென்றவர்கள் பிரதேசவாசிகள் இணைந்து 2 மணிநேரம் போராடி, 20 ஆழத்தில் சிக்குண்டிருந்த இளைஞனை மீட்ட போது, அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

5 minute ago
10 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
21 minute ago