2025 மே 09, வெள்ளிக்கிழமை

மின் கம்பியில் மோதியது ரதம்: இருவர் பலி; மூவர் பாதிப்பு

Editorial   / 2023 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பவனி வந்துகொண்டிருந்த ரதம், மின் இணைப்பு கம்பியில் மோதியதால் ஏற்பட்ட அனர்த்தத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தையில் இருந்து புதன்கிழமை (23) இரவு மாதுளாவத்தை பகுதிக்கு சென்ற ரதம், வியாழக்கிழமை (24)  காலை ஆலயத்திற்கு மீண்டும் திரும்பும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

இவ் அனர்த்தத்தில் 27 மற்றும் 37 வயதுடைய   உயிரிழந்துள்ளதாக பசறை வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

மரணித்த இருவரும் பூட்டாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர் 

சடலம் பசறை வைத்திய சாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது 

இச்சம்பவத்தில் காயமடைந்த 30 57 43.வயதுடைய மூவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ராமு தனராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X