2025 ஜூன் 30, திங்கட்கிழமை

றக்பி பயிற்றுவிப்பாளர் சடலமாக மீட்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை, மஹாவலி கங்கையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திலுள்ள பிங்கா ஓயாவில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் ஆண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் இன்று (17) மீட்டுள்ளனர்.

கண்டி பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளில் றக்பி பயிற்றிவிப்பாளராக கடமையாற்றி வந்த மஹிந்த கலு ஆராச்சி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹாவலி கங்கையிலிருந்தே இவரது சடலம்,  பிங்கா ஓயா பக்கமாக மிதந்து வந்திருக்கலாம் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது  கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X