2024 மே 03, வெள்ளிக்கிழமை

லொறி - முச்சக்கர வண்டி விபத்து ; இருவர் படுகாயம்

Janu   / 2024 ஏப்ரல் 04 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்து ஓயா பகுதியில் வியாழக்கிழமை  (04) இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக  ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குருந்து ஓயாவில் இருந்து இராகலை நோக்கி பயணித்த மரக்கறி லொறி எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் ,லொறியில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து,  நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரஸ்ட் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

டி.சந்ரு , செ.திவாகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .