Janu / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - கொழும்பு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று வட்டவளை பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சனிக்கிழமை (21) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. குறித்த லொறி அதிவேகமாக பயணித்தமையே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல எனவும், அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
சுதத் எச். எம். ஹேவா

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .