R.Maheshwary / 2022 மார்ச் 23 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பில் கேகாலை மாவட்ட சிவில் அமைப்புகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று, இன்று(23) கேகாலையில் நடைபெறவுள்ளது.
கேகாலை- ரந்தெனியவில் உள்ள சர்வதோய மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது என, சர்வோதய அமைப்பின் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பியதிலக தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டமானது, இன்று காலை 9 மணியிலிருந்து பகல் 1.30 மணிவரை நடைபெறவுள்ளதுடன், இதில் பல்வேறு சிவில் அமைப்புகளைச் சேர்ந்த 50 பேரைக் கொண்ட குழுவினர் பங்கு பற்றுவர் என்றார்.
இவர்களுக்கான தெளிவுப்படுத்தல் நடவடிக்கைக்காக கேகாலை உதவி தேர்தல் ஆணையாளர் சஜித் கஸ்தூரிசிங்க , பெப்ரல் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுஜீவ கயனாத் உள்ளிட்டவர்கள் முன்னெடுக்கவுள்ளதுடன், பெப்ரல் அமைப்பு இந்த நிகழ்வுக்கான அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026