2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

வேனில் மோதுண்டு காயமடைந்தவர் மரணம்

Freelancer   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஷ

நாவலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக, டொல்பின் ரக வேனில் மோதுண்டு காயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை, நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டிய நகரில் இருந்து கொத்மலை வரைக்கும் பயணித்துக்கொண்டிருந்த வேன், நேற்றுக்காலை 9.15 மணியளவில் நாவலப்பிட்டிய நகரத்திலுள்ள குறுக்கு வீதிக்குள் செலுத்திய வேளையிலே​யே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அதில், நாவலப்பிட்டிய தேசிய வீடமைப்புத் தொகுதியைச் சேர்ந்த 59 வயதான எஸ்.பீ.ஹேரத் என்பரே மரணமடைந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X