Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையின் 20 ஆவது தியவதன நிலமேயை, தெரிவு செய்வதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை 1.30 மணிக்கு, கண்டி பௌத்த மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
பௌத்த மக்களது சமய மற்றும் கலாசார மத்திய நிலையமாக கருதப்படும் ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான பரிபாலன பொறுப்பு தியவதன நிலமேக்கு உரித்தாகும்.
தலதா மாளிகைக்கு காணிக்கையாக அரசர் காலத்தில் வழங்கப்பட்ட ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சொத்துக்களை பரிபாலிக்கும் பொறுப்பு தியவதன நிலமேயின் கடமைகளில் ஒன்றாகும்.
தியவதன நிலமே தெரிவானது தேர்தல் மூலம் இடம்பெறுவதுடன் தேர்தலின்போது 150 விஹாரைகளின் விஹாராதிபதிகள் மற்றும் தேரர்கள், 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள் உட்பட 301 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
இம்முறை இடம்பெறும் தியவதன நிலமே தெரிவுக்கான தேர்தலில் தற்போதைய தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல, முன்னாள் தியவதன நிலமே நிரஞ்ஜன் விஜேரத்ன உட்பட நால்வர் போட்டியிடுகின்றனர்.
தியவதன நிலமேயாக தெரிவு செய்யப்படுபவர், 10 வருடங்களுக்கு பதவியிலிருக்க முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago