R.Maheshwary / 2022 நவம்பர் 17 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
எம்பிலிபிட்டிய - உல்லிந்துவாவ ஹேயஸ் தோட்டம் மேல் பிரிவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (16) சிறு கால்வாய் ஒன்றின் அருகில் இருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டது.
ஹேயஸ் தோட்டம் மேல் பிரிவவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மலையமூப்பன் மோகன்ராஜ் (வயது 51) என்ற தொழிலாளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (16) காலை தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சடலம் மரண பரிசோதனைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago