2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பகடிவதை அச்சம்: புதிய மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் சந்திக்க தடை

Super User   / 2010 நவம்பர் 30 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

கவின்கலை பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை சந்திப்பது பகடிவதை செய்யப்படலாம் என்ற காரணத்தால்  சந்திப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

முதலாம் வருட மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வில் சிரேஷ்ட மாணவர்கள் பங்குபற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று தெரிவித்தது.

இத்தடையினால் கொஹுவலையில் உள்ள பல்கலைக்கழக வளாத்தினுள் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

"பல்கலைக்கழக நிர்வாகம் பகடிவதை இடம்பெறும் என அஞ்சத்தேவையில்லை. பகடிவதை இடம்பெறாது எமது சங்கம் பார்த்துக்கொள்ளும்" என கவின்கலை பீட மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.சி.விஜேசேன தெரிவித்தார்.

"கொஹுவலை பல்கலைக்கழக வளாத்தினுள்ளேயே நூலகம் மற்றும் கணனி வசதிகள் உள்ளன. இத்தடையின் காரணமாக எம்மால் சிற்றுண்டிச்சாலையை கூட பயன்படுத்த முடியாதுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி நிகழ்வில் சிரேஷ்ட மாணவர்கள் பங்குபற்றுவதை தடை செய்துள்ளது. இப்படி செய்யவேண்டாம் என கூறிய சிரேஷ்ட மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .