Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 01 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபீலா ஹுஸைன்)
யுத்தம் முடிந்து ஏறத்தாழ இரு வருடங்களாகும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கேற்ப அரசாங்கம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
ஐ.தே.க. தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
'யுத்தத்திற்கு முன்பிருந்ததைப் போன்றே துன்பப்படுகின்றனர். யுத்தம் முடிந்து இரு வருடங்களாகின்றன. இந்நிலையில் அரசாங்கம் வாக்குறுதியளித்த சம்பள உயர்வு எங்கே?' என ரணில் கேள்வி எழுப்பினார்.
யுத்தத்தில் வெற்றியீட்டிய படையினருக்கு 600 ரூபாவையும் 12 தேங்காய்களையும் தவிர வேறெதையும் வழங்கவில்லை. ஆனால் அவர்களுக்கு எதிராக சண்டையிட்ட கருணாவுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கப்படுகிறது எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.(Pic By Pradeep Pathirana)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
28 minute ago
35 minute ago