2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஊடகவியலாளர்கள் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில்லை: டி.எம்.தம்முள்ள

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

ஊடகவியலாளர்கள் இப்பொழுது அரசியலையும் அரசியல்வாதிகளைப் பற்றியுமே எழுதுகிறார்கள்ள; மக்களின் பிரச்சினைகளைப் பற்றி அதிகமாக எழுதுவதில்லை என்று இலங்கை பத்திரிகை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் டி.எம்.தம்முள்ள தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த வியாழக்கிழமை குடும்பத்திட்ட நிறுவன தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக ஊடகவியலார்களுடன் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கும்போது... 'மக்களுடைய பிரச்சினைகள் பலவாக இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதும் இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு உதவுவதுமே பத்திரிகைகளின் பணியாக இருக்க வேண்டும். சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு பத்திரிகையாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

எயிட்ஸ் என்பதும் எச்.ஐ.வி. தொற்று என்பதும் இன்று உலகத்துக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது நாம் இந்த அபாயங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆகவே, இந்த மாதிரியான முக்கிய விடயங்களில் மக்களுக்கான விழிப்புணர்வையும் புதிய சிந்தனைகளையும் ஏற்படுத்துவதைப் பற்றிப் பத்திரிகைகள் கவனித்துக் கொள்ள வேண்டும். அரசியலையும் அரசியல்வாதிகளைப் பற்றியும் மட்டுமே எழுதுவது ஊடகங்களின் பணியாகாது' என்றார் அவர்.

இந்த நிகழ்வில் குடும்பத்திட்ட நிறுவனத்தின் வெளியீடாக வரும் பத்திரிகையை வடமாகாணத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரனுக்கு வழங்கி குடும்பத்திட்ட நிறுவனம் கௌரவித்தது.

மேலும் இந்த அமர்வில், சுகாதார அமைச்சின் தேசிய எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் ஆலோசகர் டொக்டர் சுஜாதா சமரக்கோன், உடற்கூற்று ஆலோசகர் டொக்டர் ஜானகி விதானபதிரண ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .