Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 03 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச ஊழியர்கள் அரசாங்கத்தின் கொள்கையைக் கடைப்பிடித்து சேவையாற்றும் அதேவேளை, தங்களது அனுபவத்தின் மூலம் சமூக நோக்குடன் சேவையாற்ற வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற புதுவருட தின வைபவத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மஹிந்த சிந்தனை என்பது ஒரு வட்டத்திற்குள் முடங்கக்கூடிய செயல் திட்டம் அல்ல. அது பரந்து வியாபிக்கக்கூடியதான செயற்திட்டங்களை நடைமுறைச் சாத்தியமாக்கக்கூடியது. இதனை ஏற்று பொதுமக்களுடன் சிறந்த முறையில் அணுகுவதன் ஊடாக நாம் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க முடியும். மனித நேயமிக்கதாக பணிகளும் நடத்தையும் செயற்பாடுகளும் அமைந்தால் அதனை நான் பெரிதும் வரவேற்பேன். எனது மதக் கோட்பாடும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றார்.
இன்றைய நிகழ்வில் அமைச்சு அதிகாரிகளும் உத்தியோகஸ்தர்களும் அரச பணி தொடர்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
24 minute ago
31 minute ago