2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்து வந்த உணவு விடுதி சுற்றி வளைப்பு

A.P.Mathan   / 2012 நவம்பர் 30 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு ஏத்துக்கால சுற்றுலாத்துறை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்து வந்த உணவு விடுதி ஒன்றை சுற்றி வளைத்து இன்று வெள்ளிக்கிழமை ஒருவரை கைது செய்ததுடன் பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளதாக சுற்றுலாத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

உணவு விடுதியில் வேலை செய்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

சுற்றுலாத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்துல கமகேயின் உத்தரவின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட்களான ஜீனா அஸீம், ஜயலத், பொலிஸ் கான்ஸ்டபிள்களான பண்டார, லக்ஷ்மன், முனசிங்க ஆகியோரை கொண்ட குழுவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .