2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பேன்ட் வாத்தியக் கருவிகள் கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.எம்.பௌஸான்)

மல்வானை அல் முபாரக் தேசிய கல்லூரியின் பேன்ட் வாத்திய குழுவுக்கான பேன்ட் வாத்தியக் கருவிகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலையில் நடைபெற்றது.

பியகம பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் இர்பானின் வேண்டுகோளுக்கிணங்க  ஐக்கிய தேசியக் கட்சி  பியகம தொகுதி அமைப்பாளர் ருவன் விஜயவர்தனவின் சுமார் 1 இலட்சம் பெறுமதியான  நிதி ஒதுக்கீட்டில் இந்த பேண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பியகம தொகுதி அமைப்பாளமான  ருவன் விஜயவர்தன, பியகம பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் இர்பான், பியகம  பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் பிரசன்ன சம்பத் ஆகியோரும் கலந்து
கொண்டனர்.

இதேவேளை,  இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவு  மாணவர்களுக்கான  வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .