2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ரத்மலானையில் சடலங்கள் மீட்டமை தொடர்பில் கணவனும் பணிப்பெண்ணும் கைது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்மலானை கொளுமடம சந்தியில் இரண்டு மாடி கட்டடத்திலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் அவருடைய கணவன் மற்றும் வீட்டில் வேலைச்செய்யும் பணிப்பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திடீர் தீ விபத்தினால் மூவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் குறித்த பெண்ணும் பிள்ளைகளில் ஒன்றும் கழுத்து நெரிக்கப்பட்டும் சிறிய குழந்தையின் மூச்சை அடைத்தும் கொலைச்செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே சந்தேகத்தின் பேரில் குழந்தைகளின் தந்தை மற்றும் வீட்டில் வேலைச்செய்யும் பணிப்பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையின் நிறைவேற்று அதிகாரியான குறித்த நபர் ஒருவாரத்திற்கு முன்னரே வேலையில் இருந்து விலகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திடீர் தீ விபத்து ஏற்பட்டவேளையில் தான் பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்ததாக வீட்டில் வேலைச்செய்யும் பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பவத்தை கேள்வியுற்று ஊடகவியலாளர்கள் ஸ்தலத்திற்கு விரைந்த போது  புகைப்படங்களை எடுப்பதற்கு அந்த பணிப்பெண் இடையூறு ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .