2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தொம்பே விபத்தில் பெண் பலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.எம்.பௌஸான்)
 
தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானை மாப்பிட்டிகம பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்வானை மாப்படிகம பிரதேசத்தைச் சேர்ந்த அலங்கார கபுகே குஸூமாவதி (41) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மல்வானை பிரதேசத்திலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலைக்கு  இன்று காலை வேலைக்கு செல்லும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துடன் சம்மந்தப்பட்ட வாகனம் மற்றும் சாரதி தப்பிச்சென்றுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர்மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .