2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 09 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தி அதனூடாக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் இலங்கை சுற்றுலாக் கைத்தொழில் வர்த்தக சம்மேளனத் தலைவர் ஏ.ஏம்.ஜௌபர் தலைமையிலான குழுவினருக்கிடையிலேயே இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத்தின் கொழும்புக் காரியாலயத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் பாசிக்குடா, அறுகம்பே மற்றும் நிலாவெளி உள்ளிட்ட பிரதேசங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது தொடர்பிலும் இதன் மூலம் சுற்றுலாத்துறையை இங்கு வருமானம் தரும் பிரதான துறையாக மாற்றியமைப்பது தொடர்பிலும்  பேசப்பட்டது. 
இந்நிலையில் இளைஞர், யுவதிகளுக்கு இத்துறையில் அதிகளவு வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியுமென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை சுற்றுலாக் கைத்தொழில் வர்த்தக சம்மேளன பொதுச் செயலாளர் பத்திரண, பணிப்பாளர் பி.யு.ரத்நாயக்க, இலங்கை சுற்றுலாக் கைத்தொழில் வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளான எம்.என்.எம்.இம்ரான், தயா, நிலுக்கா ஆகியோர்  கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .