2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறுபான்மையின எம்.பிக்கள் சமூகத்தை ஏமாற்றுவதை கைவிடவேண்டும்: பாஸ்க்கரா

Kanagaraj   / 2013 ஜனவரி 12 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவு சிறுபான்மை இனத்தைச் சார்ந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இனி வரும் காலங்களிலாவது சிறுபான்மை சமூகத்தின் உரிமை பற்றி பேசி சமூகத்தை ஏமாற்றுவதை கைவிடவேண்டும். என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

 ஆண்டாண்டு காலமாக தமது சொந்த நலனுக்காக அரசுடன் இருந்து தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் சிறுபான்மை இனக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சாதகமாக செயற்பட்டதன் பின் மக்கள் நம்பும்படி பசுப்பு வார்த்தைகளைத் தெரிவித்து வந்தது புதிய விடயம் அல்ல.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு  தீர்வோ குறைந்த பட்ச சலுகையோ இல்லை. இந்நிலையில் மாகாண சபையில் இருக்கின்ற  அற்பசொற்ப அதிகாரங்களையும் எடுப்பதற்கு ஆதரவு தெரிவித்தல் என்பது தமிழ் பேசும் மக்களின் தலைவிதி எப்படிப் போனாலும் தமது தலைவிதி நன்றாக இருந்தால் சரி என்ற நிலைப்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

திவிநெகுமவிற்கு ஆதரவு தெரிவித்த சிறுபான்மை இனக் கட்சி உறுப்பினர்களின் இரட்டைவேடம்  அவர்களின் செயல் தெட்டத்தெளிவாக மக்களுக்கு புடம்போட்டு காட்டுகின்றது.

எனவே, இனிவரும் காலங்களில் ஆதரவு தெரிவித்த சிறுபான்மைக் கட்சிகள் தாம் தனித்துவத்துடன் இயங்குகிறோம், இல்லையேல் தமிழ் பேசும் மக்களின்  உரிமை செயற்பாட்டை நாம் என்றும் காட்டிக்கொடுத்ததில்லை என்று அறிக்கை விட்டுக்கொண்டு தாமும் குழம்பி மக்களையும் குழப்பாமல் தாம் அரசு சார்பு நிலைப்பாடு என்ற ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் மக்கள் தமது செயற்பாடுகளை நிதானத்துடன் செயற்பட வசதியாகவும் உதவியாகவும் உலகத்திற்கு தெளிவான செய்தியை சொல்லவும் வசதியாக இருக்கும்.

தமிழ் பேசும் மக்களின் இரு மாகாணங்களில் ஒன்றாக அமையக் கூடிய கிழக்கு மாகாணத்தின் தேர்தல் காலத்தில் சொன்ன பசுப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்த மக்கள் வடக்குத் தேர்தலை எதிர்பார்த்த வேளை மாகாண சபையில் உள்ள அதிகாரத்தைக் குறைத்து பலாப்பழத்தில் உள்ள சுளைகளை எடுத்ததன்பின் உள்ள தோல் சக்கையான நிலையே மாகாண சபைக்கு உள்ளது.

அதேவேளை திவிநெலும சட்ட மூலத்தை எதிர்த்தவர்களை இவ்வேளையில் பாராட்டாமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .