2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆமை இறைச்சியுடன் மூவர் கைது

Super User   / 2013 ஜனவரி 13 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.என்.முனாஷா

சட்டவிரோதமான முறையில் ஆமைகளை இறைச்சிகளை விற்பனைக்காக வைத்திருந்த மூவரை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பிரிசோதகர் ரூபசிங்க தெரிவித்தார்.

துங்கல்பிட்டிய, தலாகேன பிரதேச வீடொன்றில் வைத்தே விற்பனைக்காக வைத்திருந்த நான்கு ஆமைகளின் இறைச்சிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரதான சந்தேகநபருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக உப பொலிஸ் பிரிசோதகர் ரூபசிங்க மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .