2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

75 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு

Super User   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுபுன் டயஸ்

75 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை ராகமையில் குறுகுலம்ப எனுமிடத்திலும் ஆமர் வீதி பகுதியிலும் விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது துறைமுகத்துக்கு வெளியே கைப்பற்றப்பட்ட ஆகக்கூடிய சட்டவிரோத சிகரெட்டாகும். ராகமையில் ஒரு களஞ்சியசாலையில் 200 பொட்டிகளில் 13,145 சிகரெட் பெட்டிகளும் ஆமர் வீதியில் 200 பெட்டிகளில் 2,000 சிகரெட் பொட்டிகளும் பிடிபட்டன.

இந்த இரண்டு திடிர் பாய்ச்சல்களின்போது நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். வரி கட்டாத இந்த சிகரெட்டுக்கள் காரணமாக அரசாங்கத்துக்கு 65 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.

பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தரவின் மேற்பார்வையில் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரிவு பொலிஸ் மா அதிபர்  ஆர்.டப்ளியூ.எம்.சீ. ரணவன வழிநடத்தலில் ஒரு விசேட அதிரடிப் படை அணி இந்த சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டன.

இவ்வாறான சட்டவிரோத சிகரெட் இறக்குமதிகளை நன்கு கைதேர்ந்த குழு மேற்கொண்டு வருவதாகவும் இவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப் படை குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .