2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் சிறுவர்களுக்கு பீடி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ரூ.48,000 அபராதம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு 48,000 ரூபா அபராதம் விதிக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார்.

யாழ். குருநகர், சின்னக்கடை வீதியில் நேற்று யாழ். மதுவரி நிலைய பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 15 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜாப்படுத்தப்பட்டனர்.

மேற்படி வர்த்தகர்களில் 12 வர்த்தகர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறும், நீதமன்றிற்கு சமூகமளிக்காத 3 வர்த்தகர்களையும், அழைப்பானை விடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .