2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ் மாநகர சபையின் புதிய கட்டிட நிர்மானத்துக்கு ரூ.9,200 மில்லியன் ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். மாநகர சபையின் புதிய கட்டிட நிர்மானப் பணிகளுக்கான உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சினால் 200 மில்லியன் ரூபா நிதி இன்று செவ்வாய்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியினை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் அதாவுல்லாவினால் யாழ் மாநகரசபை முதல்வரிடம் இன்று கையளித்துள்ளார்.

இந்த பணிக்காக 9,200 மில்லின் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் முதற்கட்ட பணிக்காக இன்று 200 மில்லியன் ரூபா இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவை படிப்படியாக வழங்கப்படும் என்றும் யாழ் மாநர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்த கட்டிட நிர்மானம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் இதற்கமைய ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததற்கு அமைய அமைச்சரவை அங்கீகாரத்துடன் இந்த நிர்மானம் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .