2025 ஜூன் 21, சனிக்கிழமை

சுயதொழில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கு 10.1 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                           (சுமித்தி)
திவிநெகும வாழ்வெழுச்சி திட்டத்தில் சுயதொழில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சினால் 10.1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இன்று புதன்கிழமை தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் சுமார் 1008 பேர் குடிசைக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் மூலப் பொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த உபகரணங்கள் ஒக்டோபர் மாதம் மூன்றாம் கிழமைகளில் வழங்கப்படவுள்ளன.

இதனடிப்படையில், பயிற்சி அனுமதிக்காக 2.4 மில்லியன் ரூபாவும், மூல பொருட்கள் வாங்குவதற்கு 7.7 மில்லியன் ரூபாவும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .