2025 ஜூன் 26, வியாழக்கிழமை

துணுக்காய் பிரதேசத்தில் குடிநீர்,மலசலகூட வசதிகள் இன்றி 2203 குடும்பங்கள்

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் குடிநீர் வசதிகள் இன்றி 1107 குடும்பங்களும் மலசலகூட வசதிகள் இல்லாமல் 1096 குடும்பங்களும் காணப்படுவதாக துணுக்காய் பிரதேச செயலகம் வெளியீட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னரான அபிவிருத்திகள் தொடர்பாகவும் தேவைகள் தொடர்பாகவும் திங்கட்கிழமை (17) வெளியிடப்பட்ட இவ்வாண்டிற்கான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துணுக்காய் பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் கருத்துத் தெரிவிக்கையில்,

இவ்வாண்டில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 456 பயனாளிகளுக்கு வீட்டுடன் கூடிய மலசலகூடங்களும் பிறிதொரு திட்டத்தின் ஊடாக 40 மலசலகூடங்களும் அமைக்;கப்படவுள்ளன.  

188 குடும்பங்களுக்கு தனிப்பட்ட கிணறுகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் 72 குடும்பங்களுக்கு புதிய கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 438 குடும்பங்களுக்கு கிணறுகள் திருத்தப்படவேண்டியுள்ளதுடன் 1107 குடும்பங்கள் குடிநீர் கிணறுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாண்டு தெரிவு செய்யப்பட்ட திட்டங்;களின் ஊடாக 4 கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .