2025 ஜூன் 21, சனிக்கிழமை

காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தின் கீழ் 11 கிராம பிரிவுகள் உள்ளடக்கம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 04 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா  

புதிதாக திறக்கப்பட்ட காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்  வலி வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்;கு உட்பட்ட பதினொரு கிராம அலுவலர்கள் பிரிவுகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தொவித்துள்ளனர்.

கடந்த பல வருடங்களாக காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையம்  உயர் பாதுகாப்பு வலயத்திலேயே இயங்கி வந்தது.

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த இடங்கள் சிலவற்றில் பொது மக்கள் தற்போது மீளக்குடியேறிய நிலையில் பொலிஸ் நிலையமும் உயர் பாதுகாப்பு வலயத்திற்;கு வெளியில் உள்ள தனியார் வீடொன்றில் இயங்கத் தொடங்கியுள்ளது.

 உயர் பாதுகாப்பு வலயத்திற்;கு வெளியில் மக்கள் மீளக்குடியேர அனுமதிக்கப்பட்ட மாவிட்டபுரம் மேற்கு நகுலேஸ்வரம், கீரிமலை, கொல்லங்கலட்டி, மாவைக்கலட்டி மற்றும் வீமன்காமம் கிராம அலுவலர்கள் பிரிவுகள் உள்ளடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஐந்து கிராம அலுவலர்கள் பிரிவுகளும்  அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக திறக்கப்பட்ட காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்;கு பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் ஆh.எ.குணரத்தினா நியமிக்கப்பட்டுள்ளார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .