2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழில் சிறு குற்றம் புரிந்த 178 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணத்தில்  சிறு குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும் 178 பேரை  கடந்த வாரம் கைதுசெய்ததாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரேரா தெரிவித்தார்.

யாழ். தலைமைப்  பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற  வாராந்த ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச்செயல்களின் பிரகாரம், 
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 41 பேரையும்  அடித்து காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 11 பேரையும் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும் 20 பேரையும் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகக் கூறப்படும் 14 பேரையும் திருடுக் குற்றச்சாட்டில் ஒருவரையும் சட்டவிரோத மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் 20 பேரையும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 11 பேரையும் காசோலை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 05 பேரையும்  பாரிய குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும் 03 பேரையும்  பாதுகாப்பு காரணமான கைதுசெய்யப்பட்டவர்கள் 02 பேரையும்  ஏனைய குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும்   50 பேரையும் கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .