2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பனை சார் கைப்பணி பயிற்சியாளர்களுக்கு 19 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள்

Kogilavani   / 2013 மே 28 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பனை சார் கைப்பணி பயிற்சியாளர்களுக்கு 19 இலட்சம் ரூபா பெறுமதியான கைப்பணி உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சிவரத்தினம் இன்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆலங்குடா பகுதியில் பனை உற்பத்தி கைப்பணி பயிற்சிபெற்ற 190 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பனை சார் உற்பத்தி கைப்பணி உபகரணங்கள் கையளிக்கப்படவுள்ளன.

இவ் உபகரணங்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும்; 7 ஆம் திகதியளவில் வழங்கி வைக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .